• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள பட்ஜெட்டில் திருநங்கையர் நல்வாழ்வுக்கு ரூ. 1௦ கோடி

March 14, 2017 தண்டோரா குழு'

கேரள மாநில சட்டப் பேரவையில் 2௦17 – 18 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் திருநங்கையர்களின் நல்வாழ்வுக்கு 1௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள சமூகநலத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில்,

“சமீபத்தில் 2௦17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருநங்கையரின் நல்வாழ்வுக்கு 1௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

திருநங்கையரின் புதுவாழ்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், “இந்தத் தொகை அவர்களுடைய கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்குச் செலவிடப்படும். அவர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுடைய புதுவாழ்வுக்காகவும் பொதுநலத்தின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஷைலஜா கூறினார்.

மேலும் படிக்க