• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் – கார்த்திக் எம்.எல்.ஏ

February 26, 2018 தண்டோரா குழு

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் என கோவை எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,    

சிறுவாணி அணைகட்டு பகுதியில் இருந்து சராசரியாக 101 mlt குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணைகட்டு பகுதியில் கேரளா அரசு அதிகப்படியான குடிநீரை தற்போது திறந்து விட்டு உள்ளனர். ஏற்கெனவே பவானி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகளை கேரள அரசு அணைகட்டி உள்ளதால் , குடிநீர் விநியோகம் குறைந்து உள்ளது. தமிழக அரசு , கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணை பிரச்சனையை சீர் செய்ய வேண்டும். சிறுவாணி அணைகட்டு பகுதியில் , பழங்குடியின மக்களுக்காகவும், வன விலங்குகளுக்காகவும் திறந்து விடக்கூடிய  தண்ணீர் அளவு அதிகப்படியான அளவு திறந்து விடப்படுகிறதா அல்லது சராசரி அளவு திறக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோவையில் உள்ள அனைத்து கட்சியினரை சேர்ந்தவர்கள் சிறுவாணி அணைக்கட்டு பகுதிக்கு சென்று இது தொடர்பாக பார்வையிட முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க