• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா அரசை கண்டித்து பெரியார் திராவிட கழகம் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக சாலை மறியல்

November 27, 2021 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் கேரளா அரசை கண்டித்து பெரியார் திராவிட கழகம் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை நவகரையில் நேற்று ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறைபிடித்துள்ளனர்.

தமிழன வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள்
வனக் காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு ரயில் நிலையத்தில் சிறைபிடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரளா சிறை பிடித்துள்ளது கண்டித்து கோவை மலையாள சமாஜம் அமைந்துள்ள சாலையில் தந்தை திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் படிக்க