• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் 21 வயதில் மேயராகி பெண் சாதனை!

December 25, 2020 தண்டோரா குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஆர்யா ராஜேந்திரன் இளம் வயதில் (21) மேயரான முதல் நபர் என்ற சாதனையை படைத்தார்.

கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில்,முடவன்முகள் வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு
ஆர்யா ராஜேந்திரனை தேர்வு செய்தது.

இதை மாநிலக் கமிட்டி ஏற்று, இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றால், இந்திய வரலாற்றிலேயே மிக இளம் வயது மேயர் என்ற பெயரைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க