• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; – கோவையில் பயணிகள் அவதி

December 17, 2019

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெருவதால் கோவையில் பொதுமக்கள் அவதி பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்ல வந்த பயனிகள் பேருந்து இயக்கப்படாததால் சிரமத்திற்க்கு ஆளானார்கள்.

(சிஏபி) குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடுமுழுவதும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் இந்த சட்டத்தை எங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டோம், என அறிவித்தார். இதை தொடர்ந்து கேரளாவில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ்சும் ஒரேமேடையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதனைதொடர்ந்து கேரளா முழுவதும் அனைத்துக்கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை அடுத்து. கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் வழிதட பேருந்து நிலையம் இன்று ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், முழு அடைப்பு போராட்டம் நடைபெருவது அறியாத சிலர் பேருந்து நிலையம் வரைவந்து, கேரளா செல்லமுடியாமல் ஏமாற்றத்துடன் காத்திருந்தது பரிதாபமாக உள்ளது. மேலும் வேறுவழி இன்றி மக்கள் திரும்பி செல்வதை காணமுடிந்தது.

மேலும் படிக்க