• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை- திருநம்பி திருமணம்!

May 10, 2018 தண்டோரா குழு

கேரளாவில் முதல் முறையாக சட்டப்படி இசான் ஷான் மற்றும் சூர்யா ஆகியோருக்கு முதல் திருநங்கை திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறினார். அதைபோல், தனக்குள் ஏற்பட்ட பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர்கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் துணை நடிகையாக இருக்கும் சூர்யா வினோத்.இவர் ஏற்கனவே திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.

மூன்றாம் பாலினத்தை சேர்த்தவர்கள் என்றாலே ஒதுக்கி வைத்து பார்க்கும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, காதலித்து இன்று சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணமாகும். முன்னதாக இந்த ஜோடிக்கு Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஜோடி கேரளாவின் முதல் மாற்று பாலின தம்பதியராகும் பெயரினை பெற்றுள்ளனர்.

எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை என இஷானும் சூர்யாவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க