• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லம் திறப்பு !

February 26, 2019 தண்டோரா குழு

கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூர்வீக இல்லம் உள்ளது. அங்குதான் எம்.ஜி.ஆரின் இளைமை காலம் கழிந்தது. இவ்வீடு பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, பழுதடைந்த இந்த இல்லத்தை மனிதநேய ஐ.ஏ.எஸ் கல்வி மையம் சீரமைத்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை, எம்.ஜி.ஆரின் பெற்றோர்கள் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனை இன்று அம்மாநில ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி, MGR அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய முக்கிய அமைச்சர்கள். மற்றும் கேரளா மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க