February 26, 2019 தண்டோரா குழு
கேரளாவில் ஓரு கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் வாழ்ந்த இல்லத்தை கேரள ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார்.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆர் வாழ்ந்த பூர்வீக இல்லம் உள்ளது. அங்குதான் எம்.ஜி.ஆரின் இளைமை காலம் கழிந்தது. இவ்வீடு பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, பழுதடைந்த இந்த இல்லத்தை மனிதநேய ஐ.ஏ.எஸ் கல்வி மையம் சீரமைத்தது. சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை, எம்.ஜி.ஆரின் பெற்றோர்கள் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதனை இன்று அம்மாநில ஆளுநர் சதாசிவம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மனித நேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி, MGR அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய முக்கிய அமைச்சர்கள். மற்றும் கேரளா மாநில சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.