• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமிக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்

January 30, 2020

ஏழை எளிய மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு உதவியாக இருந்த கேபிஆர் குழுமம் சேர்மன் ராமசாமி அவர்களுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

கோவை அரசூர் பகுதியில் கேபிஆர் தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல சமூக சேவை புரிந்து, தனது மில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு படிப்பு, தொழில் வழங்குவது மட்டுமல்லாது, ஐஏஎஸ் அகாடமி, கல்வி நிறுவனங்கள் உள்பட பல வகைகளில் ஏழை எளிய தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய உதவிகரமாக இருந்தமைக்கு, கடந்த வாரம் ஒடிசாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் சார்பில் கேபிஆர் குழுமத்தின் சேர்மன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அதற்கு பாராட்டு விழா கேபிஆர் கல்லூரியின் கலையரங்கில் இன்று நடைபெற்றது. கேபிஆர் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, விழாவில் சிறப்பு விருந்தினராக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் நந்தினி ரங்கசாமி கலந்து கொண்டார். எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க