• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம் !

August 3, 2021 தண்டோரா குழு

கோவை கேஜி மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் புதிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி மருத்துவமனை 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் அவசர சிகிச்சை பிரிவு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்க நிறுவனத்தின் தொழில் நுட்பத்துடன் 2 இருதய அறுவை சிகிச்சை அரங்கத்தை கேஜி மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் முன்னிலையில் டாக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.

இது குறித்து கேஜி மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவத்சலம் கூறுகையில்,

நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய
2 இருதய அறுவை சிகிச்சை அரங்கம் இன்று கேஜி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள
இந்த அறுவை சிகிச்சை அரங்கத்தில்
சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் எல்லா விதமான நவீன உபகரணங்கள் உள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க