• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெளசிகா நதி பள்ளத்தில் எரிந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சடலம்

February 15, 2020

நரசிம்மநாயக்கன்பாளையம் கெளசிகா நதி பள்ளத்தில் எரிந்த நிலையில் கால் டாக்சி டிரைவர் சடலம் கொலை செய்யப்பட்டு இருப்பாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கே.எஸ்.பி பம்ப்ஸ் பஸ் நிறுத்தம் அருகே கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கெளசிகா நதி பள்ளத்தில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபோது, அந்த பள்ளத்தில் தீயில் முழுவதும் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பித்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை செய்ததில் டூவலர் மற்றும் இறந்தவரின் செல்போன் கிடைத்தது. அதில் கும்பகோனத்தை சேர்ந்த சீத்தாராமன் என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் என்ற தியாகராஜன் என்றும், தற்போது இவர் சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் அலுவலகத்திலேயே தங்கி இருந்து கால் டாக்சி ஓட்டிவருவதும், திருமணம் ஆகி மனைவியை பிரிந்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் வேலை செய்யும் கம்பெனிக்கு தகவல் அளித்த போலீசார் மேற்கொண்டு யாராவது கொலை செய்து இருப்பார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருகிலுள்ள கம்பெனிகளின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க