• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கூவத்தூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

February 12, 2017 தண்டோரா குழு

சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் இரண்டாவது நாளாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனையடுத்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர்களிடம் உள்ள கேமராக்கள், செல்போன்களை பறித்துக்கொண்டு கொன்றுவிடுவோம் என்றெல்லாம் சசிகலா ஆதரவாளர்கள் மிரட்டி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும், செய்தி சேகரிப்பதை தடுத்து நிறுத்தி அராஜகம் செய்யும் குண்டர்களை வெளியேற்றவேண்டும், காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், என தொடர்ந்து கோஷமிட்டனர்.

பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக ஊர்மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க