• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூடங்குளம் 2வது பிரிவு இரு வாரங்களில் மீண்டும் தொடக்கம்

March 14, 2017 பா.கிருஷ்ணன்

கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் இரண்டாவது உலை இரு வாரங்களில் மீண்டும் மின்உற்பத்தியைத் தொடங்கும். இது ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

அதே அளவு திறனுள்ள முதல் உலை எரிபொருள் நிரப்புவதற்காக வரும் ஏப்ரல் மாத இடையில் உற்பத்திப் பணியைத் தற்காலிகமாக நிறுத்தும் என்று கூடங்குளம் அணுமின் உற்பத்தித் திட்டத்தின் இயக்குநர் எச்.என். சாஹு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்றாவது பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் வரும் மே மாதம் இறுதியில் தொடங்கும்.

இரண்டாவது உலை சோதனைப் பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இரு வாரங்களில், அதாவது மார்ச் கடைசிவாரம் அது மீண்டும் இயங்கும்.

இரண்டாவது பிரிவு தேவையின் காரணமாகவே உற்பத்தி நிறுத்தப்பட்டது என்று மின்சக்தி இயக்க கார்ப்பரேஷன் (POSOCO) தெரிவித்தது.

முதல் பிரிவு தனது உற்பத்தித் திறனில் 85 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.ஆண்டுதோறும் அணுமின் உலையில் மூன்றில் ஒரு பங்கு எரிபொருள் பிரிவு மாற்றப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 163 எரிபொருள் பிரிவுகள் உள்ளன. எனவே, ஆண்டுக்கு ஒரு முறை 54 எரிபொருள் பிரிவுகள் மாற்றப்பட்டு வருகின்றன.

தற்போது முதல் உலையின் இரண்டாவது எரிபொருள் பிரிவு மாற்றப்படுகிறது.மூன்றாவது உலையின் கட்டுமானப் பணிகள் மே மாதம் தொடங்கி, 69 மாதங்களில் நிறைவடையும்.இதனிடையே, தென் மாநிலங்களில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் திறனுள்ள இரு பிரிவுகள், கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையத்தில் உள்ள தலா 220 மெகாவாட் திறனுள்ள நான்கு பிரிவுகள் போதிய அளவுக்கு மின்சாரம் தடையின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன”.

இவ்வாறு கூடங்குளம் இயக்குநர் எச்.என். சாஹு தெரிவித்தார்.

மேலும் படிக்க