• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஷ்புவின் கடவுச் சீட்டைப் புதுப்பிக்க மறுத்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

January 7, 2017 தண்டோரா குழு

நடிகை மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கடவுச் சீட்டைப் புதுபிக்க மறுத்த விவகாரத்தில் சென்னை மண்ட கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) கூறியதாவது:

“கடந்த 2௦12ம் ஆண்டு சென்னை கடவுச் சீட்டு அலுவலக அதிகாரிகள் எனது கடவுச் சீட்டைப் புதுப்பித்துத் தந்தனர். இது 2௦22ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.

தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததால் எனது கடவுச் சீட்டின் பக்கங்கள் நிரம்பிவிட்டன. மீண்டும் வெளிநாடு செல்வதற்குப் பக்கங்கள் இல்லாததால் கூடுதல் தாள்கள் இணைத்துக் கொடுக்கும்படி விண்ணப்பித்திருந்தேன்.

ஆனால், அதிகாரிகள் 2௦11ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்து எனது கடவுச் சீட்டைப் புதுப்பிக்காமல் நிராகரித்தனர்.

இதனால், மீண்டும் குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் திட்டம் தடைப்படுகிறது. மண்டல அதிகாரிகளின் கவனத்திற்கு பல கடிதங்கள் கொடுத்ததும் அவர்கள் கண்டுக்கொள்ளாததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். அதை விசாரித்த நீதிபதிகள் சென்னை மண்டல கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க