• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து மனநோயாளி அடித்துக் கொலை

May 11, 2018 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் சந்தேகம்படும்படி யார் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க மனநோயாளி ஒருவர் கையில் அழுக்குத் துணி மூட்டையுடன் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.அவரை அப்பகுதிமக்கள் குழந்தை கடத்த வந்தவர் என எண்ணி சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மனநோயாளி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ன்னர் அவர் சடலத்தை பொதுமக்கள் உப்பு நீர் ஏரியில் உள்ள மேம்பாலத்தில் கயிற்றை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். ன்னர் விசாரணையில் அவர் ஒரு மனநோயாளி எனவும் வெகு நாட்களாக திருவள்ளூர் பகுதியில் சுற்றி திரிந்ததும் அவர் குழந்தை கடத்தும் நபர் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க