கோவை மாநகர காவல் துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை மாவட்டம் முழுவதும் இன்று குழைந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வடகோவையில் மாநகர காவல்துறை துறை சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி வடகோவை சிந்தாமணியில் தொடங்கி டவுன்ஹால் ரோடு வழியாக சென்று ஆர்எஸ்புரம் வழியாக வடகோவையை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு அடங்கிய பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாலி உள்ளிட்ட பதகைகளை கையில் ஏந்தியாவாறும், விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியாவாறும் சென்றனர்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள்,காவல்துறையினர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட சமூக நலத்துறையினர், மாவட்ட குழந்தைகள் நல அலகு துறை அதிகாரிகள், குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் சத்துணவுத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் அதிகாரிகள், காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்