• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குற்றவாளிகளை உடனே கைது செய்ய கொளத்தூர் மணி வலியுறுத்தல்

March 17, 2017 தண்டோரா குழு

கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பரூக். 31 வயதான இவர் உக்கடம் பழைய இரும்பு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். பாரூக் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்.

வியாழன் இரவு சில மர்ம நபர்களால் மாநகராட்சி கழிவுநீர்ப் பண்ணை அருகே படுகொலை செய்யப்பட்டார். உக்கடம் காவல் துறையினர் பரூக்கின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரூக்கின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பரூக் கொள்கை விரோதத்தினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட பரூக் உடல் பரிசோதனை நடத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் ஆகியோர் பரூக்கின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, “மதங்களுக்கு ஏதிரான கருத்துக்களை முன் வைப்பவர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தக் கொலை குறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல் துறையினர் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க