March 19, 2018
தண்டோரா குழு
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் இறப்பை தடுப்பதில் கோவை அரசு மருத்துவமனை மாநில அளவில் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது.
கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.பிரசவத்த்திற்கு என பிற அரசு மருத்துவமனைகளில் இருந்து 55 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பிணிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.இந்நிலையில் எடை குறைவாக ஆபத்தான நிலையில் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதில் கோவை அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு குழந்தைகள் இறப்பை தடுப்பதில் மாநில அளவில் முதலிடம் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடப்பாண்டும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் இறப்பை தடுப்பதில் முதலிடம் பிடித்து உள்ளது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் குறைந்த எடை குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் வழங்கும் சிகிச்சை குறித்த அளவீடுகளின் அடிப்படையில் கோவை மருத்துவமனை முதலிடம் பிடித்து உள்ளது.