• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி மீட்பு

April 6, 2017 தண்டோரா குழு

மனிதர்களை போல் நடக்க தெரியாமலும், பேச முடியாமலும் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமியை உத்தரபிரதேச மாநிலத்தின் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மொட்டிபூர் வரம்பிலுள்ள கத்ரீனாகாத் வனவிலங்கு சரணாலயத்தில் இரவு ரோந்து சென்ற துணை இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ் அந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளார். அந்த சிறுமி குரங்குகளுடன் வாழ்வதை கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், அவளை காப்பாற்ற நினைத்தார். சிறுமியின் அருகில் சென்று அழைத்த அவரை, குரங்குகள் சத்தமிட்டன. அந்த சிறுமியும் அதேபோல் செய்துள்ளாள். பல மணி நேர போராட்டதிற்கு பிறகு அந்த சிறுமியை காப்பாற்றி, அந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில்,

“பேசவோ நமது மொழியை புரிந்துக்கொள்ளவோ அவளால் முடியவில்லை. மனிதர்களை கண்டால் மிகவும் பயப்படுகிறாள். வன்முறையான முறையில் நடந்துக்கொள்கிறாள்.

தற்போது சிகிச்சைக்கு பிறகு சில முன்னேற்றங்கள் அவளிடம் தெரிகிறது. அவளுடைய முன்னேற்றங்கள் மெதுவாக இருக்கிறது. உணவை கையில் எடுத்து உண்ணாமல், வாய்மூலம் தான் உண்ணுகிறாள். கால்களால் நடக்க பயிற்சி அளித்த பிறகும், சில நேரங்களின் கைகளையும் கால்களையும் சேர்த்து காட்டு விலங்குகளை போல் தான் நடக்கிறாள்” என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க