March 23, 2018
தண்டோரா குழு
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னை மற்றும்,ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றனர்.இவர்கள் டிரக்கிங் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர்.இதில், 18 பேர் உடல் கருகி பலியானார்கள் மற்றும் பலர் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும்,தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதியும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.