• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

March 23, 2018 தண்டோரா குழு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னை மற்றும்,ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றனர்.இவர்கள் டிரக்கிங் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர்.இதில், 18 பேர் உடல் கருகி பலியானார்கள் மற்றும் பலர் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.மேலும்,தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதியும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க