• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குனியமுத்தூரில் கூர்மையான ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

December 10, 2019

கோவை குனியமுத்தூர் அருகே கூர்மையான ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல், படுகாயங்களுடன் மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மகன் ஜீன்ஸ் திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் குனியமுத்தூர், பி.கே.புதூர் அருகே உள்ள தனியார் ஆண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு விடுதி அருகே இருந்த போது ஜீன்ஸ் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. மற்றொரு அறையில் தங்கி இருந்த பிரின்ஸ் என்ற கல்லூரி மாணவரும் மது போதையில் இருந்துள்ளார். அப்போது ஜின்ஸ் , பிரின்ஸ் இடையே தகராறு ஏற்று இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டாத தெரிகிறது. அப்போது பிரின்ஸ் கூர்மையான ஆயுதத்தில் ஜின்ஸை தாக்கியதில் ஜின்ஸ் படுகாயமடைத்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த சக மாணவர்கள் ஜீன்ஸ் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த குனியமுத்தூர் போலீஸார் பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க