• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குணியமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட தி மாடர்ன் டிராவல்ஸ் இரண்டாவது கிளை

October 20, 2022 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட தி மாடர்ன் டிராவல்ஸ் இரண்டாவது கிளையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் திறந்து வைத்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தி மாடர்ன் டிராவல்ஸ் இசுலாமியர்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் சேவைகளையும் மற்றும் சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்து தருகின்றனர்.

இந்நிலையில் தி மாடர்ன் டிராவல்ஸ் நிறுவனம் தங்களது இரண்டாவது கிளையாக குணியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் அருகே உள்ள அகில் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் துவக்கியுள்ளனர்.நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜமீல் அகமது மற்றும் ஏஜாஸ் அகமது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்,தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் டெக்ஸிட்டி கலீல், கார்த்திகேயன்,சாபுதீன்,கர்நாடகா டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க