May 5, 2018
தண்டோரா குழு
கோவை கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை விவகாரத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவினர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த பொய் வழக்கை போட்ட காவல்துறையை கண்டித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், நா.கார்த்திக் எம்எல்ஏ மற்றும் தங்கராஜ் மீது போடப்பட்ட பொய் வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை மே 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.அதேசமயம், பொய் வழக்கில் சிறை சென்ற திமுகவினர் 7 பேருக்கு, சூலூர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்திரவிட்டது.இந்த உத்தரவையடுத்து, கோவை மத்திய சிறையிலிருந்து பொய் வழக்கில் சிறை சென்ற கண்ணம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வார்டு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.