• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல – சத்குரு

December 16, 2020 தண்டோரா குழு

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. இது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சமிக்கா ரவி , “இந்தியாவில் விவசாயிகளை விட 2 மடங்கு அதிகமாக குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்காக யார் குரல் கொடுக்கப்போகிறார்கள்?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த பதிவை ரீட்விட் செய்துள்ள சத்குரு, “ஒரு பெண் குடும்ப அமைப்பின் அச்சாணியாக திகழ்கிறாள். வீட்டுத்தலைவியர் தற்கொலை செய்வது சமூகத்திற்கு நல்லதில்லை; இது சமூகத்தின் அடிக்கற்களையே அசைத்துவிடும். நம் உள்நலன் நமக்கு தலையாயதாக மாறவேண்டும் – நம்மை சுற்றியுள்ளோர் நலனை உறுதிசெய்ய இது அத்தியாவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க