• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

December 19, 2019

கோவை அவிநாசி சாலையில் வஊசி மைதானம் எதிர்ப்புறம் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை உடைக்காதே” “மதசார்பின்மையை உடைக்காதே” என கோசங்களை மாணவிகள் எழுப்பினர். அகதிகளாக வருபவர்களை புறக்கணிப்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் மதத்தின் அடிப்படையில் வரும் பிரிவினையை ஏற்று கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க