• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோவையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

December 17, 2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகக் கூறி கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்திருப்பதாக கூறி திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி அருகேயுள்ள டாடாபாத் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க