December 17, 2019
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும் இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகக் கூறி கோவையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்திருப்பதாக கூறி திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலணி அருகேயுள்ள டாடாபாத் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வந்த மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவளித்து துரோகம் இழைத்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.