December 16, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைபடுத்தவில்லை எனவும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் எனவும் கோவையில் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் 20 அடி உயரம் கொண்ட சுற்றுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழ்ந்தனர். இதற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், இதற்கு காரணமான உரிமையாளர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பம் தொடர்பாக போராடியர்வர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமுறைபடுத்தவில்லை என்றும் தலித்து மக்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்லடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
குடி உரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என தெரிவித்தார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசு பாசிசத்தை ஏவுகிறதாக குற்றம்சாட்டிய அவர், குடியுரிமை சட்டத்தை திரும்ப் பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.