• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலிசார் அணிவகுப்பு ஒத்திகை

January 25, 2021 தண்டோரா குழு

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவையில் போலிசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டனர்.

கோவையில் 72வது குடியரசு தின விழா முன்னிட்டு ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள மாவட்ட வ.உ.சி மைதானத்தில் நாளை காலை 8.05 மணிக்கு ஆட்சியர் இராசமணி தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் அவர், சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

இதையொட்டி கோவை ஆயுதப்படை போலீசார் இன்று காலை குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா ஊரடங்கினால் குடியரசு தின விழாவின் போது பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும், பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க