• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்திட வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

January 27, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியில் குடிநீர் பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குழாய் பதிப்பு, கசிவுகள் அடைப்பு போன்ற பணிகளுக்காக சாலைகளை தோண்டும் முன் மாநகராட்சியின் உரிய அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்திட வேண்டும். ஆர்.எஸ்.புரம் பகுதியில் 24*7 குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, செயற்பொறியாளர் (24*7 குடிநீர் திட்டம்) பார்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க