• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்தும் சேவைகள் சுணக்கமின்றி நடைபெறுகிறது மாநகராட்சி கமிஷனர் தகவல்

September 25, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது,

கோவை மாநகராட்சியில் யூடிஐஎஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 82 ஆயிரத்து 278 பரிவர்த்தனைகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, புதிய காலியிட வரி, கட்டட வரைபட அனுமதி ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, யூடிஐஎஸ் மென்பொருள் வாயிலாக சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இணையதளம் வாயிலாக சொத்துவரி மற்றும் குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் எவ்வித சுணக்கமுமின்றி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களின் சொத்துவரி, குடிநீர்க்கட்டணங்களை இணையதளம் வாயிலாக செலுத்த கோவை மாநகராட்சியின் இணையதளத்தில் உள்ள இணைப்பிலோ (www.CCms, gov.in) அல்லது Online payment of Tax இணைப்பின் வாயிலாகவோ தங்கள் விவரங்களைப் பதிவு செய்தும் அல்லது நேரடியாக சொத்துவரி, குடிநீர்க் கட்டணங்களை htipsr/tnurbancriy.tn.gov.in இணைப்பின் மூலமும் செலுத்த இயலும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க