• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் ஆதாரத்தை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 10, 2018 தண்டோரா குழு

கோவை நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை 26 ஆண்டு காலத்திற்கு ரூ.3ஆயிரத்து 150 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்றும், மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என்றனர்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநகராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.மேலும், முறையாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும்,திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க