• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத் மாநிலத்தில் 4.௦ ரிக்டர் அளவு நிலநடுக்கம்

March 6, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) 4.௦ ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து அதிகாரி கூறுகையில்,

“குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.3௦ மணியளவில் 4.௦ ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறியுனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தோ பொருட் சேதம் குறித்தோ தகவல் வெளியாகவில்லை” என்றார்.

“4.௦ ரிக்டர் அளவு நிலநடுக்கம், கட்ச் மாவட்டத்திலிலுள்ள ராப்பர் நகரிலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது” என்று காந்திநகர் நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

“ராஜபார் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அதன் அருகிலிருந்த பாச்சாவு நகர் வரை உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தேசிய பேரிடர் படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராப்பர் மற்றும் பாச்சாவு நகரங்களுக்கு இரண்டு அணிகளை அனுப்பியுள்ளது” என்று கட்ச் மாவட்டத்தின் ஆளுநர் எம்.ஏ. காந்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க