• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கீரை வகை சூப்புகளை உழவர் சந்தைகளில் விற்க அனுமதிக்க வேண்டும்

July 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:

கிராமங்களில் உற்பத்தியாகும் இயற்கையுடன் கூடிய முருங்கைக்கீரை, புதினா, பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் போன்ற கீரைகளில் இருந்து கலப்படம் இல்லாமல் விவசாயிகள் இயற்கை முறையில் சூப் தயாரித்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் பகுதிகளில் தமிழக அரசு மூலம் புத்துயிர் பெற்று வரும் உழவர் சந்தைகளில் இந்த வகை சூப் விற்பனை செய்யவும், குறிப்பாக ஆர். எஸ்.புரம் மற்றும் பிற உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் மூலிகை தன்மை கொண்ட கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க