• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

December 23, 2020 தண்டோரா குழு

கிராமப்புற பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோவை சௌரிபாளையம் பகுதியில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.கோவை மாவட்ட அமைப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை ,திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட கிராம கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் பின் பேசிய கிராமபுற கோவில் பூசாரிகளின் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம்,

கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு கிராமபுற பூசரிகளுக்கு ஊக்க தொகை வழங்குவதகா அறிவித்திருந்தனர். இதனை உடனடியாக தமிழக அரசு கருத்தில் கொண்டு கிராமப்புற பூசாரிகளுக்கு மாதம் ஊக்கத்தொகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கிராமத்தில் உள்ள கோவிலுகளுக்கு மின்சார கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் ,கோட்ட தலைவர் ராஜன், மேற்கு மண்டல தலைவர் வேலுசாமி ,மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க