June 10, 2019
தண்டோரா குழு
கோவை கிராமபகுதியில் செயல்பட்டு வரும் வங்கி முடக்குவதை கை விட வேண்டி விவசாய அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
கோவை,தென்னமல்லூர் எனும் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.இந்த வங்கி சேவையை அந்த பகுதியின் சுற்றுப்புற பகுதியிகளான தேவராயபுரம், போளுவாம்பட்டி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக விவசாய மொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் இந்த வங்கி சேவை முடக்குவதாக வந்த தகவலையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கம் உட்பட அப்பகுதியை சேரந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர்.
அம்மனுவில் நீண்ட காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த குறிப்பிட்ட வங்கி சேவையை முடக்கினால் அப்பகுதியில். சுமார் 10 கி.மீட்டருக்கு மேல் வங்கி சேவைக்கென விவசாயிகள் செல்ல வேண்டியிருப்பதால் குறிப்பட்ட வங்கியே தொடர வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.