• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் சிறுமியின் பெற்றோர், வழக்கறிஞர் தீபிகா குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை

April 16, 2018 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆசிபாவின் குடும்பம் மற்றும் வழக்கறிஞருக்கு பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிபா. இவர் ஜனவரி மாதம் கடத்தப்பட்டு மயக்க மருந்து கொடுத்த 8 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கோயில் குருக்கள், ஓய்வு ஆசிரியர், அவரது மகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என 8 பேரின் இந்த கொடூரச்செயலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து, கத்துவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், சிறுமியின் தரப்பில், வழக்கறிஞர் தீபக் சிங் ராஜவாட் வாதாடுகிறார். இந்த வழக்கில், 8 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கை, காஷ்மீரிலிருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என சிறுமியின் தந்தை சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,

‘சிறுமியின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல, ‘சிறுமியின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கை சண்டிகருக்கு மாற்றுவது தொடர்பாக 27-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக் கூறி நிதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

மேலும் படிக்க