• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

August 5, 2019 தண்டோரா குழு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

காஷ்மீரில் பெண்களுக்கு இதுநாள் வரை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. பிற மாநில இளைஞர்களை திருமணம் செய்த காஷ்மீர் இளம்பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்தது. மத்திய அரசின் நடவடிக்கை மூலம் தற்போது காஷ்மீர் பெண்கள் சம உரிமை பெற்றுள்ளனர்.சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் சலுகைகளை பெறமுடியும். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடியின மக்கள் பெறும் சலுகைகள் காஷ்மீரில் பெற முடியாத சூழல் நிலவியது. காஷ்மீரின் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தற்போது அனைத்து சலுகைகளையும் பெற முடியும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவை ஒரே நாளில் எடுக்கவில்லை.தொப்பியில் இருந்தும் முயலை எடுப்பது போல் திடீரென சட்டப்பிரிவு 370ஐ நீக்கவில்லை. உரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்கு பிறகே சட்டப்பிரிவு 370ஐ நீக்கியுள்ளோம் என விளக்கமளித்தார்.

மேலும் படிக்க