• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் கொரோன நிவாரணம்

June 14, 2021 தண்டோரா குழு

காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் hands-free சனிடைசர் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் வி தாமோரிடம் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் வழங்கினார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முயன்ற சேவையை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் மக்கள் பணிக்காக தினம்தோறும் சேவையாற்றி வருகிறது.அதன் ஒருபகுதியாக காவல்துறையினர் பாதுகாப்பிற்காக 150 hands-free சனிடைசர் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக இன்று கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் ஆணையர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் கூறுகையில்,

காவேரி குரூப் கம்பெனி சார்பில் தமிழக முதல்வருக்கு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை மாநகராட்சி ஆணையரிடம் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து 100 பேருக்கு ஒரு மாதமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைைத்து காவல் நிலையத்திற்கும் 150 hands-free சனிடைசர் ரூபாய் இரண்டு லட்சத்து பத்தாயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஹோம் பார்க் கிரேட்டிவ் ஹவுசஸ் நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் ஏ.ஆர் கிருஷ்ணகுமார், உதவி ஆணையர்கள் முருகவேல், பிரேம்ஆனந்த், சிற்றரசு மற்றும் காவேரி குரூப் கம்பெனி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க