• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்த முதல்வர் பழனிசாமி

April 30, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று மாலை உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் சோ.அய்யர் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கவர்னர் மாளிகையில் ஒரு அறையில் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேசினர். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.

மேலும், மேலாண் வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் ஆளுநர் எடுத்துரைக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 3 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆளுநருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க