• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்கப்படுவது உறுதி– ஆளுநர்

April 17, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்கப்படுவது உறுதி என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது,ஆதாரமற்றது, முட்டாள் தனமானது.பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான செய்திகளை பார்த்தேன்.மாணவர்களை பேராசிரியர் தவறாக வழி நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும்,காவிரி விவகாரத்தில் வாரியம் அமைக்கப்படுவது உறுதி.தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கப்படும்.ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன்.டெல்டா விவசாயிகள் பயன்பெற காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைப்பதே சரி என பேசினேன்.காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூட மத்திய அமைச்சர் கட்கரியிடம் பேசினேன்.காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார்.காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் நல்ல முடிவு வரும் என்றார்”.

மேலும் படிக்க