• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சரத்குமார் உண்ணாவிரதம்

April 25, 2018 தண்டோரா குழு

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக காங்கிரஸ்தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.மேலும் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கும் வரை கருப்பு சட்டை அணியப்போவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்துகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க