• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம்

April 7, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தொடங்கவுள்ள காவிரி மீட்பு நடை பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கவுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கொம்பில் இருந்து முதல் குழுவும், 9-ம் தேதி அரியலூரில் இருந்து 2-வது குழுவும் பயணம் தொடங்கவுள்ளது.

மேலும்,காவிரி உரிமை மீட்புப் பயணத்தில்,வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்.காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதியில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.காவிரிக்காக நடைபெறும் இந்த மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார்.

மேலும் படிக்க