• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் – மு.க.ஸ்டாலின்

March 3, 2018 தண்டோரா குழு

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடா்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவா் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

பின்னர் முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் பேசிய மு.க.ஸ்டாலின்,

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தினரை பிரதமர் சந்திக்க மறுப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம்.காவிரி வாரியம் விவகாரத்தில் மக்களை, விவசாயிகளை ஏமாற்றும் காரியத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

மேலும்,காவிரி விவகாரத்தில் பிரதமர் சந்திக்க மறுப்பதால் திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் எனவும், தமிழக பிரதிநிதிகளை திங்கள்கிழமைக்குள் பிரதமர் சந்திக்கவில்லையெனில் சட்டப்பேரவையைக் கூட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

 

 

மேலும் படிக்க