• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

February 16, 2018 தண்டோரா குழு

காவிரி நதி நீர் விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்திற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் தர உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி நதி நீர் விவகாரத்தில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என்றும், அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்.

மேலும்,கலைஞர் தமிழகத்திற்குப் பெற்றுத்தந்த உரிமைகளை அதிமுக அரசு பறிகொடுத்து விட்டது  என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க