• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையின் வரம்பு மீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – நடிகர் ரஜினி

May 23, 2018 தண்டோரா குழு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இச்சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த்,

ஸ்டெர்லைட் போராட்டின் போது காவல்துறையின் வரம்பு மீறிய, மிருகத்தனமான செயலை கண்டிப்பதாக கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக அரசு மற்றும் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுவதாக சாடியுள்ளார்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க