• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது – டிஜிபி சுற்றறிக்கை

July 23, 2019 தண்டோரா குழு

காவல் துறையினர் வரதட்சனை, பரிசுப்பொருட்கள் வாங்கக்கூடாது என அனைத்துக் காவல்துறைனருக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அண்மை உத்தரவை செயல்படுத்தும் விதமாக டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்துக் காவல்துறைனருக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த பரிசுப்பொருட்களையும் பெறக் கூடாது. பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், டிஜிபியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெறக்கூடிய பரிசுப்பொருளின் விலையானது 200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சனை பெறக் கூடாது, தொழில் பங்குதாரராக இருக்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளையும் டிஜிபி பிறப்பித்துள்ளார்.இதை மீறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க