July 23, 2019
தண்டோரா குழு
காவல் துறையினர் வரதட்சனை, பரிசுப்பொருட்கள் வாங்கக்கூடாது என அனைத்துக் காவல்துறைனருக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அண்மை உத்தரவை செயல்படுத்தும் விதமாக டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்துக் காவல்துறைனருக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
காவல்துறையில் பணிபுரிபவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த பரிசுப்பொருட்களையும் பெறக் கூடாது. பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், டிஜிபியின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெறக்கூடிய பரிசுப்பொருளின் விலையானது 200 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சனை பெறக் கூடாது, தொழில் பங்குதாரராக இருக்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளையும் டிஜிபி பிறப்பித்துள்ளார்.இதை மீறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.