• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கால்பந்து போட்டியை காண வினோத பயணம் செய்த ரசிகர்

June 8, 2018 தண்டோரா குழு

உலக கோப்பை கால்பந்து ஆட்டத்தை பார்க்க ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் மூலம் பயணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் துவங்கவுள்ளது.பல்வேறு நாட்டைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் ரஷ்யாவுக்கு வந்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் ஜெர்மனி ரசிகரான ஹூபோல்ட் விர்த்தின் பயணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜெர்மெனியில் இருந்து ஹூபோல்ட் விர்த் அவரது செல்ல பிராணியான அவரது நாயுடன் டிராக்டரில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது டிராக்டரில் உலக கோப்பை சின்னங்களை அலங்கரித்துள்ளார்.இந்த டிராக்டர் ஆனது ஒரு மணி நேரத்திற்கு 30 கிலோமீட்டர் என்கின்ற வேகத்தில் செல்கிறது.இதனால்,அவர் வருங்கின்ற 17 ஆம் தேதி ஜெர்மனி அணி பங்கேற்கும் போட்டியை காண்பதற்கு சென்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க