காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும்,எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் காலா படத்தின் புரோமோஷனுக்காக நேற்று ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,
“காவிரி பிரச்னைக்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நடிகர் கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை,இது ஆரோக்கியமான ஒன்று.காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன்.அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல
ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்.படத்தை தடைசெய்ய தேவகவுடா விடமாட்டார்.காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்தேன்.நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான்.நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !
நாடு தழுவிய ஐ கேர் மான்ஸூன் சர்வீஸ் கேம்ப் இசுசு மோட்டார்ஸ் இந்தியா நடத்துகிறது
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு