• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

காலா படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவு தான் – ரஜினி

June 5, 2018 தண்டோரா குழு

காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்ததாகவும்,எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் காலா படத்தின் புரோமோஷனுக்காக நேற்று ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,

“காவிரி பிரச்னைக்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நடிகர் கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை,இது ஆரோக்கியமான ஒன்று.காலா படம் வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன்.அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்தி பார்ப்பது சரியல்ல
ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்.படத்தை தடைசெய்ய தேவகவுடா விடமாட்டார்.காலா படத்திற்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்தேன்.நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவுதான்.நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க