• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் சிலிண்டர் வெடி விபத்து வழக்கு- கைதான ஐந்து நபர்கள் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்

October 28, 2022 தண்டோரா குழு

கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை நடந்த கார் வெடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சமேசா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் உபா சட்டம் போடப்பட்டுள்ள நிலையில் 25 ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி ஐந்து பேரையும் போலீசார் மூன்றுநாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் உக்கடம் வின்சென்ட் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜமேசா முபினின் உறவினர் அப்சர் கானை போலீசார் 26 ஆம் தேதி கைது செய்தனர்.

அப்சர் கானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் அப்சர்கானின் வீட்டின் அருகில் ஒன்றாக நின்று பேசுவதும், வெடித்த கார் வழக்கமாக அப்சர் கானின் வீட்டு அருகில் நிற்பதும், சம்பவத்தன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்சல்கானின் வீட்டருகில் கார் நின்றதும் தெரிய வந்தது.

மேலும் கைது செய்யப்பட்ட அப்சர் கான் உயிரிழந்த ஜமேசா முபீனுக்கு ஆன்லைனில் பொட்டாசியம் சார்கோல் சல்பர் உள்ளிட்ட வேதிப்பொருட்களை பறிமுதல் செய்து கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனை அடுத்து அப்சர் கானை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் இன்று உக்கடம் , ஜி எம் நகர் பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாள் கஸ்டடி முடிந்த நிலையில் மீண்டும் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5 இல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனை அடுத்து மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்தோஸ் உத்தரவிட்டதன் பேரில் ஐந்து பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லபட உள்ளனர். கடந்த முறை ஆஜர் செய்தபோது 8.11.2022 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க