December 20, 2019
காரமடை வித்யவிகாஷ் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (17) என்ற மாணவன் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தர்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தக்கோரி மாணவனின் உறவினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியினரின் மகன் ஹரிஷ் காரமடை வித்யவிகாஷ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று மாலை தனியார் விடுதியில் ஹரிஷ் தூக்கிட்டு இறந்து கடந்த நிலையில் காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இன்று மாணவனின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று மாலை மாணவனின் உறவினர்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.