• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

December 20, 2019

காரமடை வித்யவிகாஷ் பள்ளியை சேர்ந்த ஹரிஷ் (17) என்ற மாணவன் நேற்று தனியார் விடுதியில் தூக்கிட்டு தர்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தக்கோரி மாணவனின் உறவினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த குமார்-சுமத்ரா தம்பதியினரின் மகன் ஹரிஷ் காரமடை வித்யவிகாஷ் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று மாலை தனியார் விடுதியில் ஹரிஷ் தூக்கிட்டு இறந்து கடந்த நிலையில் காவல்துறை மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இன்று மாணவனின் உடலை வாங்க மறுத்த அவரது பெற்றோர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவன் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இன்று மாலை மாணவனின் உறவினர்கள் சுமார் 100 பேர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க