• Download mobile app
29 Jul 2025, TuesdayEdition - 3457
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

November 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அரசு மருத்துவமனையில்,காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,

பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 2 ஐ.சி.யூ படுக்கைகளும் உள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க